Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியது

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியது

By: Karunakaran Mon, 20 July 2020 10:28:56 AM

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை நெருங்கியது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 8 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 37 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

brazil,coronavirus,corona prevalence,corona death ,பிரேசில், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புடைய 52 லட்சத்து 94 ஆயிரத்து 335 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 59 ஆயிரத்து 878 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் 87 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடும் உள்ளது. பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|