Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஈராக்கில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

ஈராக்கில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Tue, 10 Nov 2020 3:43:36 PM

ஈராக்கில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்தது

5 லட்சம் பேர் பாதிப்பு... ஈராக்கில் கொரோனா வைரஸ் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஐந்து இலட்சத்து ஆயிரத்து 733பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை மொத்தமாக 11ஆயிரத்து 380பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,iraq,infection,hospital,treatment ,கொரோனா, ஈராக், தொற்று, மருத்துவமனை, சிகிச்சை

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 184பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். 53பேர் உயிரிழந்தனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 58ஆயிரத்து 120பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 376பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை நான்கு இலட்சத்து 32ஆயிரத்து 233பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|
|