பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.84 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Mon, 10 Aug 2020 09:36:00 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தானில் கொரோனா காரணமாக 2.84 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,84,121 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 634 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 14 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 6,082 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் 14-வது இடத்தில் உள்ளது.