இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்வு
By: Karunakaran Fri, 24 July 2020 1:51:59 PM
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. ஊரடங்கு அமல்படுத்தியும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 8,17,209 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புடைய 4,40,135 பேர் நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,861லிருந்து 30,601ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 3,47,502 பேரும், தமிழகத்தில் 1,92,964 பேரும், கர்நாடகாவில் 80,863 பேரும், டெல்லியில் 1,27,364 பேரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனைகளை அதிகரித்ததாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சற்று ஆறுதலடைய செய்துள்ளது.