ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Fri, 31 July 2020 11:23:11 AM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.70 கோடியைக் கடந்துள்ளது.
இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து 1.08 கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். மேலும் கொரோனா காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 6.70 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 11-வது இடத்தில் உள்ளது.
தற்போது ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கு கொரோனாவுக்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 2,621 பேர் அங்கு கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரே நாளில் 226 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் 2.61 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புடைய 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.