Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுச்சேரியில் இனி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் இனி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் - முதல்வர் நாராயணசாமி

By: Monisha Fri, 19 June 2020 1:43:25 PM

புதுச்சேரியில் இனி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையும் - முதல்வர் நாராயணசாமி

புதுவையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. புதுவையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்த்து பெரிய அளவில் போராடி வருகிறோம். புதுச்சேரியில் கடந்த 17 தினங்களாக 67 சதவீதம் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுச்சேரியில் முதலில் டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்கள், அடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்கள், பின்னர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு சென்று திரும்பியவர்களால் தான் கொரோனா தொற்று அதிகரித்தது. ஒருவர் பாதிக்கப்பட்டால், அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்.

puducherry,narayanaswamy,coronavirus,awareness ,புதுச்சேரி,நாராயணசாமி,கொரோனா வைரஸ்,விழிப்புணர்வு

மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் ஜூன் 30-க்கு பிறகு மேலும் தளர்வுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அப்போது கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்வது குறித்து புதுச்சேரிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் எதற்கும் மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை.

வெளிமாநில மக்களை அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனிமேல் புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இருக்கின்ற வசதிகளை கொண்டு புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். கிராமப்புறத்திலும் தற்போது கொரோனா பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்று குறித்து கிராம மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :