Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 50 ஆண்டுகளில் இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம்

50 ஆண்டுகளில் இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம்

By: Karunakaran Wed, 01 July 2020 12:02:15 PM

50 ஆண்டுகளில் இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம்

உலக மக்கள்தொகை நிலவரம் குறித்து ஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. உலகளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும், அதில், இந்தியாவில் மட்டும் 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

india,women,missing,un ,இந்தியா,பெண்கள், பெண் சிசு கொலை, ஐ.நா

சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்களை காணாமல் போயுள்ளனர். காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் இரண்டு பங்கு ஆவர். பிறந்த பிறகு அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆவர். பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதால், ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதாகவும், திருமணத்துக்கு காத்திருக்கும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்காமல், திருமணம் தள்ளிப்போவதாகவும், இதனால் குழந்தை திருமணங்கள் பெருக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2050-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஆண்கள் எண்ணிக்கை10 சதவீதமாக அதிகரிக்கும். பல நாடுகளில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புவதால் தான் இந்த நிலை ஏற்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|