Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 55 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 568 ஆக அதிகரிப்பு

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 55 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 568 ஆக அதிகரிப்பு

By: vaithegi Thu, 30 June 2022 08:17:14 AM

உலகில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள்  55 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 568 ஆக அதிகரிப்பு

வாஷிங்டன்: சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி மிக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

corona,vaccine ,கொரோனா,தடுப்பூசி

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 84 லட்சத்து 65 ஆயிரத்து 209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52 கோடியே 67 லட்சத்து 68 ஆயிரத்து 398 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 55 ஆயிரத்து 961 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|