சவுதியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது
By: Nagaraj Sat, 16 May 2020 11:59:10 PM
சவுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து 50 ஆயிரத்தை தாண்டியதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் பல நகரங்களிலும் கொரோனா கூடிக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில் சவுதியில் கொரோனா பாதிப்பு 50,000 ஐ கடந்தது. இது தொடர்பாக சுகாதாரதுறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று மூலமாக புதிதாக 2,840 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 51, 980 ஆக அதிகரித்தது.
நேற்று முன்தினம் 22 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டது. நாங்குநேரி அருகே விஜயஅச்சம்பாடு கிராமத்திற்கு வந்த 11 பெண்கள் உள்பட 26 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 116 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 26 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் 28 பேர் சிகிச்சையில் உள்ளனர்.