இலங்கையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1895 ஆக உயர்வு
By: Nagaraj Mon, 15 June 2020 5:15:03 PM
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளதாக அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவில் இருந்து நாட்டுக்கு வந்ததன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 6 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவ்வமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,342 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்று மாத்திரம் 55 பேர் குணமடைந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியான 1,895 பேரில் 542 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.