Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்வு

சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்வு

By: Nagaraj Thu, 21 May 2020 1:03:53 PM

சவுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரமாக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் சவுதி அரேபியாவில் 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடந்த சில மாதங்களாக வெகு அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

62 thousand,coronal casualties,339 killed,saudi arabia ,62 ஆயிரம், கொரோனா பாதிப்பு, 339 பேர் பலி, சவுதி அரேபியா

இதில் சவுதி அரேபியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,691 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 62,545 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 10 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. இத்தகவலை சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Tags :