நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது
By: vaithegi Mon, 17 Apr 2023 12:56:02 PM
இந்தியா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி கொண்டு வருகிறது. அதனை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி இருக்கிறது. இருந்தாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதையடுத்து தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிப்பு குறைவு என்றாலும், அதன் வேகம் அதிகமாக இருப்பதால் பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 9111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 27 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் அது மட்டுமில்லாமல் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
எனவே கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.