தாராவியில் கொரோனா வைரசால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,899 ஆக அதிகரிப்பு
By: Karunakaran Sun, 07 June 2020 09:48:08 AM
இந்தியாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தற்போது அங்கு கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தாராவியில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
தற்போது, தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா வைரசால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1,899 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளதாக மஹாராஷ்டிர மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.