சென்னையில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரம் ஆனது
By: Nagaraj Wed, 29 June 2022 11:41:02 AM
சென்னை: 4 ஆயிரத்தை நெருங்கியது... சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பின் தீவிரம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சென்னையிலும் பாதிப்பின் வேகம் அதிகரித்துள்ளது.
அதன்படி சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3
ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மாநகராட்சி தரப்பில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து
முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரமாக்கப்படும்
எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை
அறிவுறுத்தியுள்ளது.