Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.12 கோடியாக உயர்வு

இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.12 கோடியாக உயர்வு

By: Karunakaran Sun, 27 Sept 2020 1:42:20 PM

இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.12 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இந்தியாவில் தினசரி நோய்த்தொற்று ஒரு லட்சத்தை எட்டிய நிலையில், தற்போது குறையத் தொடங்கி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு 59,92,533 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 88,600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,124 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 94,503 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49,41,628 ஆக உயர்ந்துள்ளது.

india,corona virus,corona test,corona impact ,இந்தியா, கொரோனா வைரஸ், கொரோனா சோதனை, கொரோனா தாக்கம்

இந்தியாவில் நேற்று மட்டும் 92043 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,56,402 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.58 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.46 சதவீதமாகவும் உள்ளது.

தற்போது இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.12 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 7,12,57,836 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 9,87,861 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags :
|