Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்வு

By: Monisha Sat, 13 June 2020 1:17:56 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 14,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக உள்ளது.

coronavirus,tamil nadu,chennai,tiruvallur district ,தமிழ் நாடு, சென்னை,திருவள்ளூர் மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு நிலவரம்

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,752 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,832 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ஒரே நாளில் ஆவடியில் 15 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 11 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை 830 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :