Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வங்கதேசத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

வங்கதேசத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

By: Nagaraj Thu, 11 June 2020 3:33:41 PM

வங்கதேசத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது

பலியானவர்கள் எண்ணிக்கை... வங்கதேசத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 37 பேர் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் பலி எண்ணிக்கை 1,012-ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர, 3,190 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து, நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 74,865-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

bangladesh,corona,casualties,pakistan,impact ,வங்க தேசம், கொரோனா, பலி எண்ணிக்கை, பாகிஸ்தான், பாதிப்பு

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக 5,387 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.
இதுதவிர, கொரோனா நோய்த்தொற்றுக்கு மேலும் 83 பேர் பலியானதாக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை 2,255-ஆக உயா்ந்துள்ளது.

Tags :
|