Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

By: Karunakaran Wed, 17 June 2020 2:16:48 PM

இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் சற்று ஆறுதலடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் மொத்தம் 354065 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 10974 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronavirus,india,corona death,maharastra ,இந்தியா,கொரோனா,கொரோனா பலி,மகாராஷ்டிரா

கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11903 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 186935 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் காரணமாக 155227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் 113445 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 48019 பேருக்கும், டெல்லியில் 44688 பேருக்கும், குஜராத்தில் 24577 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Tags :
|