பிரேசிலில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியது
By: Karunakaran Sun, 07 June 2020 1:20:35 PM
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. பிரேசிலில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
பிரேசிலில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.73 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 27 ஆயிரத்து 581 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.