100 கோடி தடுப்பூசிகளுக்கான ஆர்டர் வந்துள்ளது; ரஷ்யா அறிவிப்பு
By: Nagaraj Wed, 12 Aug 2020 6:53:07 PM
வெளிநாடுகளிடம் இருந்து 100 கோடி கொரோனா தடுப்பூசிக்கான ஆர்டர் வந்துள்ளதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு முடிவு கட்டுவதில் ரஷ்யா முழு வேகத்தில் இயங்கி வருகிறது. ரஷ்யாவின் 'ஸ்பூட்னிக் 5' தடுப்பூசி வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ கழகத்தாலும் அனுமதி பெற்றுள்ளது.
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்ய அதிபர் புதினின் மகள் போட்டிருப்பதாக செய்திகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பூட்னிக் 5 முதலாவது பேட்ச் இன்னும் இரண்டு வாரங்களில் காலத்திற்குள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் இந்த ஸ்பூட்னிக் 5 கொரோனா எதிர்ப்பு தடுப்பூசியை விருப்பம் உள்ள
அனைவரும் தாமாகவே முன்வந்து போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்
கொள்ளப்பட்ள்ளது. அதே சமயம் இந்த தடுப்பூசியைப் போடுபவர்களுக்கு ஏற்படும்
பக்க விளைவுகள் குறித்து கண்காணிப்பதற்காக புதிதாக மொபைல் செயலி ஒன்றையும்
ரஷ்ய சுகாதார அமைச்சகம் உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த
தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
தற்போது வரையில் வெளிநாடுகளிடம் இருந்து 100 கோடி தடுப்பூசிக்கான ஆர்டர்
வந்துள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.