சாதாரண தரப் பரீட்சை தீர்மானிக்கப்பட்ட தினத்தில் இல்லை; கல்வி அமைச்சர் தகவல்
By: Nagaraj Wed, 02 Dec 2020 08:35:37 AM
கல்வி அமைச்சர் தகவல்... கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் புதிய திகதி பரீட்சைக்கு 06 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தற்போது நாட்டில் உள்ள நிலைமையில் பரீட்சைகளை நடத்துவது அநீதியான செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை
இந்த விடயம் தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய
சூழ்நிலையில் 11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் சுமார் 50 சதவீதமான
மாணவர்கள் தற்போது கல்வியைத் தொடர முடியாத சூழலில் இருப்பதாக
சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.