Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு மாதத்திற்கு பின்னர் கடையை திறந்த உரிமையாளர்; ஹாயாக படுத்திருந்த மலைப்பாம்பால் அதிர்ச்சி

இரண்டு மாதத்திற்கு பின்னர் கடையை திறந்த உரிமையாளர்; ஹாயாக படுத்திருந்த மலைப்பாம்பால் அதிர்ச்சி

By: Nagaraj Fri, 22 May 2020 4:56:37 PM

இரண்டு மாதத்திற்கு பின்னர் கடையை திறந்த உரிமையாளர்; ஹாயாக படுத்திருந்த மலைப்பாம்பால் அதிர்ச்சி

இரண்டு மாதங்களுக்கு மேலாக பூட்டப்பட்டு இருந்த கடையை நேற்று திறந்த உரிமையாளருக்கு செம அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சுகமாக படுத்திருந்தது மலைப்பாம்பு. இந்த அதிர்சசி சம்பவம் திருப்பதியில் நடந்துள்ளது.

ஊரடங்கு காரணத்தால் 60 நாட்களுக்கும் மேல் திருப்பதியில் இருக்கும் கடைகள் மூடியே இருந்தது. தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டது.

stores,two months,locked,tirupati,python,purity ,கடைகள், இரண்டு மாதம், பூட்டிக்கிடந்தது, திருப்பதி, மலைப்பாம்பு, தூய்மை

இதில் மஞ்சள் குங்குமம் உள்ளிடவை விற்கும் கடையை உரிமையாளர் திறந்துள்ளார். அப்போது கடைக்குள் மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இதையடுத்து
பெரிய போராடத்துக்கு பிறகு ஒருவழியாக அந்த மலைப்பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.

பல நாட்கள் பூட்டியே கிடந்த இடம் பாம்பு தங்குமிடமாக மாறியதை
பார்த்த மற்ற கடைக்காரர்கள் கடைகளை திறக்க தயக்கம் காட்டுகின்றனர். வேறெதாவது வனவிலங்குகள் கடைக்குள் இருக்குமோ என பயப்படுகின்றனர்.

இதனால் அனைவரது பாதுகாப்பு கருதி வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளை திறந்து சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Tags :
|
|
|