காஷ்மீரின் சுதந்திர கனவு என்று பதிவிட்டு அந்தர் பல்டியடித்த பாகிஸ்தான் பிரதமர்
By: Nagaraj Sun, 05 Feb 2023 10:05:40 PM
புதுடெல்லி மாறவே இல்லப்பா... பாகிஸ்தான் பிரதமர் டுவிட்டரில் காஷ்மீரின் சுதந்திர கனவு என பதிவிட்டு உள்ளார். பாகிஸ்தான் அரசு, கடந்த காலங்களில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்தபோதும், அதன் தன்மை மாறவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
சமீபத்தில் பெஷாவர் நகரில் நடந்த பயங்கரவாதம் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகளை கொன்றது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஆண்டுதோறும் பிப்ரவரி 5ஆம் தேதி காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், ஜம்மு-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படும் காஷ்மீர் பகுதியை தொடர்ந்து ஆக்கிரமித்துள்ள போதிலும், இந்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கான தங்கள் கனவை நனவாக்க இந்தியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக இடைவிடாது போராடி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் தியாகத்தால் சுதந்திர ஜோதியை ஏந்துகிறார்கள். அவர்களின் கனவு விரைவில் நனவாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார். நமது காஷ்மீரி சகோதர சகோதரிகளுக்கு ஒன்றுபட்ட ஆதரவைக் காட்ட இன்று முழு பாகிஸ்தானும் ஒன்று சேர்ந்துள்ளது. சுய தீர்மானத்திற்கான உரிமைக்கு ஐ.நா. ஒப்புதல் அளித்த விசயத்திற்கான போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பால் தொடர்ந்து நசுக்கப்பட்டு, உறுதியற்று போனவர்களுக்கு ஆதரவு வழங்குகிறோம் என தெரிவித்து உள்ளார்.
நாங்கள் பாடம் கற்றுக் கொண்டோம், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் வரை சென்ற ஷெரீப், ஷெரீப் தற்போது டுவிட்டரில், காஷ்மீரில் இந்தியாவின் ஆக்கிரமிப்பு என பதிவிட்டு பல்டி அடித்துள்ளார்.