Advertisement

தொடர் மழையை அடுத்து குளிரினால் வாடும் சென்னை மக்கள்

By: Monisha Mon, 30 Nov 2020 09:43:03 AM

தொடர் மழையை அடுத்து குளிரினால் வாடும் சென்னை மக்கள்

நிவர் புயல் காரணமாக கடந்த 23-ந்தேதி முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. தொடர் மழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடானது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள். பல இடங்களில் வீடுகளிலும் மழைநீர் புகுந்தது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் சென்னை மக்களை குளிர் வாட்ட தொடங்கியுள்ளது. தொடர் மழை பெய்த காலத்தில் நாள் முழுவதுமே குளிர்ச்சியாகவே இருந்தது. மழையையும், குளிரையும் மக்கள் ஒருசேர அனுபவிக்க நேரிட்டது.

ஆனால் தற்போது மழைக்காலத்தை காட்டிலும் குளிரின் தன்மை அதிகரித்திருக்கிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குளிர் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பலரது வீடுகளில் ஏ.சி. எந்திரங்கள் மற்றும் மின் விசிறிகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்டது. குளிர் மற்றும் கொசுக்கடி மக்களை புலம்பவைத்து வருகிறது.

rain,flood,cold,mosquito,lament ,மழை,வெள்ளம்,குளிர்,கொசுத்தொல்லை,புலம்பல்

குளிரை எதிர்கொள்ளும் வகையில் கம்பளி போர்வைகளை மக்கள் அதிகளவில் வாங்க தொடங்கிவிட்டனர். மேலும் குழந்தைகளுக்கு தேவையான மப்ளர், சுவெட்டர் உள்ளிட்டவைகளையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்கள். குடிநீரை கூட காய்ச்சி குடிக்க தொடங்கிவிட்டனர். மேலும் காபி, டீ உள்ளிட்டவைகளும் வீடுகளில் அதிகமாக அருந்தப்படுகிறது. வீடுகள் கிட்டத்தட்ட குளிர்சாதன பெட்டி போலவே மாறியிருக்கிறது.

இரவு பொழுது தாண்டினாலும் அதிகாலை பொழுதில் குளிர் இன்னும் அதிகமாகவே இருக்கிறது. வீடுகளின் உள்ளே இருக்கும் தரைப்பகுதி, பாதம் ஒட்டும் அளவுக்கு குளிராக இருக்கிறது. குளிர் காரணமாக வெந்நீரில் மட்டுமே குளிக்க முடிகிறது என்று மக்கள் கூறுகிறார்கள். அந்தளவு குளிரின் தாக்கம் இருக்கிறது. ஆனால் பகல் பொழுதில் வெயிலின் தாக்கமும் சற்று அதிகமாக இருக்கிறது.

Tags :
|
|
|