கடலூர் மக்கள் அவதி... மீண்டும் வெளுத்து வாங்கும் மழை
By: Nagaraj Sun, 13 Nov 2022 9:46:21 PM
புதுவை: மீண்டும் பெய்ய தொடங்கிய மழையால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வரும் நிலையில், நேற்று பகலில் வெயில் அடிக்க தொடங்கியது. ஆனால் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநில, வெளிநாடு சுற்றுலா
பயணிகள் அதிகளவில் வருவார்கள். தற்போது மழை பெய்து வருவதால் சுற்றுலா
பயணிகளின் வருகை குறைவாக இருந்தது.
புதுவை
வந்த ஒருசில சுற்றுலா பயணிகளும் மழை காரணமாக தங்கும் விடுதிகளில்
முடங்கினர். மழை காரணமாக இன்று செயல்பட்ட சண்டே மார்க்கெட்டில் பொதுமக்கள்
கூட்டம் குறைவாக காணப்பட்டது.
Tags :
tourists |
freezing |
rain |