Advertisement

அதிபர் மாளிகையில் சிறிது நேரம் அதிபரான மக்கள்..

By: Monisha Sun, 10 July 2022 9:37:01 PM

அதிபர் மாளிகையில் சிறிது நேரம் அதிபரான மக்கள்..

இலங்கை: இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அவரது இருக்கையிலும் ஒவ்வொருவராக அமர்ந்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என்ற மகிந்த ராஜபக்சவை மக்கள் விரட்டியடித்தனர்.உயிரை கையில் பிடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்ச தப்பியோடினார்.

president,people,protest,selfie ,இலங்கை ,அதிபர்,மாளிகை,தட்டுப்பாடு,

இதையடுத்து பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல சில முயற்சிகளை எடுத்தார். எனினும் பெரிய அளவில் அதற்கு பலன் ஏதும் இல்லை.
அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மக்கள் அதிபர் மாளிகையின் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு சென்று கோத்தபய ராஜபக்சவை தேடினார்கள். இந்த நிலையில் அதிபரின் கட்டிலில் படுத்துக் கொண்டு ஒரே அக்கப்போராக இருந்தது.

அது போல் அதிபர் மாளிகையில் இருந்த ஒரு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்தனர்.

Tags :
|