Advertisement

சீனாவில் தலைகாட்ட தொடங்கிய பிளேக் நோய்

By: Karunakaran Mon, 06 July 2020 2:40:15 PM

சீனாவில் தலைகாட்ட தொடங்கிய பிளேக் நோய்

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சீனா மீண்டது. தற்போது மீண்டும் அங்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கொரோனா மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக அங்கு பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்ட தொடங்கியுள்ளது. சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் நேற்று முன்தினம் ஒருவருக்கு பிளேக் நோய் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

coronavirus,china,plague,g4 virus ,கொரோனா வைரஸ்,பிளேக் நோய்,சீனா,ஜி4 வைரஸ்

பிளேக் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு, மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ந்தேதி பிளேக் நோய் சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.

மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை தின்றதால் அவர்களுக்கு பிளேக் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. தற்போது அவர்களுடன் தொடர்பில் இருந்த 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் சமீபத்தில் பன்றியில் இருந்து பரவக்கூடிய ஜி4 வைரஸ் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|