விமான விபத்தில் 2 விமானிகள் உட்பட 19 பேர் பலி
By: Nagaraj Sat, 08 Aug 2020 08:20:13 AM
கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 2 விமானிகளும் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால், வெளிநாடுகளில் சிக்கி ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
இதனால், மத்திய அரசு "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்களை அழைத்து வரப்படுகிறது. இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்ஹடைல் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தனர்.
இந்த விமானத்தில் மொத்தமாக 2 விமானிகள், 2 பணிப்பெண்கள், பயணிகள் 184 பேர்
என மொத்தம் 191 பேர் இருந்துள்ளனர். துபாயில் இருந்து நேற்று பிற்பகல் 3
மணிக்கு புறப்பட்ட விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான
நிலையத்திற்கு வந்தது.
கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது
எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு கட்டுப்பாட்டை
இழந்து ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது.
இந்த
விபத்தில், விமானம் இரண்டாக உடைந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க
தீயணைப்பு வாகனங்களுடன், மீட்புக்குழுவினருடம் செயல்பட்டனர். இந்த கோர
விபத்தில் 2 விமானிகள் ஒரு குழந்தை உட்பட 17 பேர் உயிழந்துள்ளனர். மேலும்,
100-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடனும் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று
வருவதாக கூறப்படுகிறது. விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3
பேர் தமிழர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.