Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... தப்பியோடிய 28 பயணிகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... தப்பியோடிய 28 பயணிகள்

By: Nagaraj Fri, 09 Dec 2022 10:38:40 AM

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்... தப்பியோடிய 28 பயணிகள்

ஸ்பெயின்: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து 28 பயணிகள் தப்பியோடிய சம்பவம் மற்ற பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் எதுவென்று இதுவரை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதில் 16 பேர் பிடிப்பட்டுள்ளனர்.

மொராக்கோவில் இருந்து துருக்கிக்கு ஒரு விமானம் புறப்பட்டு சென்றனர். இந்த விமானம் ஸ்பெயினில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் இருந்த புலம்பெயர்ந்தவர்கள் தப்பியோடினர். இதனால் மற்ற பயணிகள் என்னவென்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

flight,labor,drama,passengers,trauma,spain ,விமானம், பிரசவ வலி, நாடகம், பயணிகள், அதிர்ச்சி, ஸ்பெயின்

விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறியதால், பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும், 28 பயணிகள் டார்மாக் வழியாக தப்பி ஓடினர். 16 பேரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், 12 பேரை தேடி வருகின்றனர். பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

இதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. விமானத்தை தரையிறக்கவே பிரசவ வலி ஏற்பட்டதாக நாடகம் ஆடப்பட்டுள்ளது என்று தெரிய வந்ததால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags :
|
|
|
|