Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார்

அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார்

By: Nagaraj Sat, 01 July 2023 11:07:09 PM

அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதியில் சப் -இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

police,papanasam,bullock carts,sandblasting,confiscation ,போலீசார், பாபநாசம், மாட்டுவண்டிகள், மணல் அள்ளியது, பறிமுதல்

அப்போது கோவில் தேவராயன்பேட்டை பகுதியில் குடமுருட்டி ஆற்றில் இருந்து அரசு அனுமதி இன்றி 2 மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தனர்.

இந்த 2 மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாட்டு வண்டி ஓட்டி வந்த கோவில் தேவராயன் பேட்டை பார்வதிபுரத்தை சேர்ந்த சுரேஷ் (38) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags :
|