Advertisement

ஜூன் 15-ம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்

By: vaithegi Tue, 30 May 2023 11:37:59 AM

ஜூன் 15-ம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்

சென்னை : தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ..... சென்னை கிண்டியில் பல்வேறு வசதிகளுடன் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டிடமானது ஜூன் மாதம் 5-ஆம் தேதி திரப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

எனவே இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தமிழகத்திற்கு அழைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி புறப்பட்டு சென்று நேரில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், சில நிர்வாக காரணங்கள் காரணமாக ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவரால் தமிழகம் வர இயலவில்லை.

president of the republic,m.k.stalin , குடியரசு தலைவர் ,மு.க.ஸ்டாலின்

இதை தொடர்ந்து தற்போது ஜூன் 15-ம் தேதி தமிழகம் வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக கிண்டி பல்நோக்கு மருத்துவமனையானது ஜூன் 15-ம் தேதி திறக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த புதிய மருத்துவமனைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நூற்றாண்டு பிறந்தநாள் ஆண்டை முன்னிட்டு இக்கட்டிடம் அனுமதி திறக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Tags :