Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி சென்னைக்கு வருகை தர இருக்கிறார்

வருகிற ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி சென்னைக்கு வருகை தர இருக்கிறார்

By: vaithegi Sat, 29 Apr 2023 3:27:19 PM

வருகிற ஜூன் 5-ம் தேதி  ஜனாதிபதி சென்னைக்கு வருகை தர இருக்கிறார்

சென்னை: மு. க. கருணாநிதி அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3-ம் தேதி 2021-ம் ஆண்டு முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பை போலவே சென்னை கிண்டியில் தரை தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்களாக கிட்டத்தட்ட ரூபாய் 230 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது.

chennai,president ,சென்னை,ஜனாதிபதி

மேலும், இப்பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான வேலைப்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து வருகிற ஜூன் 5-ம் தேதி திறந்து வைக்கப்படயிருக்கிறது. எனவே இதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் ஜனாதிபதி திரௌபதி மர்மு அவர்களை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்குமாறு அழைக்கப்பட்டிருந்தது.

தற்போது முதல்வர் அவர்களின் அழைப்பை ஏற்று வரும் ஜூன் 5-ம் தேதி ஜனாதிபதி திரௌபதி சென்னைக்கு வருகை புரிகிறார். மேலும், இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த பிறகு கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :