Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருகிறது

சென்னை கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருகிறது

By: vaithegi Mon, 17 July 2023 10:03:26 AM

சென்னை கோயம்பேடு சந்தையில் தொடர்ந்து  தக்காளி விலை உயர்ந்து வருகிறது

சென்னை : தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு ... சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்மழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உச்சத்தை அடைந்து உள்ளது. இதனால் சாமானியர்கள் தக்காளியை வாங்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டு வருகின்றனர்.

எனவே இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தக்காளி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பண்ணை பசுமை கடைகள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்து கொண்டு வருகிறது.

tomato price,koyambedu market,chennai , தக்காளி விலை,சென்னை கோயம்பேடு சந்தை

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 120க்கு விற்பனையாகிறது.

இதனை அடுத்து சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூபாய் 150 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 3 நாட்களாக மொத்த விற்பனையில் கிலோ 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இன்று மேலும் ரூபாய் 10 அதிகரித்து காணப்படுகிறது.

Tags :