Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமரின் மலிவு விலை மருந்துகள் திட்டம் வாயிலாக பொதுமக்களுக்கு ஏராள நன்மைகள்

பிரதமரின் மலிவு விலை மருந்துகள் திட்டம் வாயிலாக பொதுமக்களுக்கு ஏராள நன்மைகள்

By: Nagaraj Sun, 01 Jan 2023 3:33:41 PM

பிரதமரின் மலிவு விலை மருந்துகள் திட்டம் வாயிலாக பொதுமக்களுக்கு ஏராள நன்மைகள்

புதுடெல்லி: பிரதமரின் மலிவு விலை மருந்துகள் திட்டம் வாயிலாக பொதுமக்களின் மருத்துவச் செலவு ரூ.5,300 கோடியாக குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் உரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைவருக்கும் மலிவு விலையில் தரமான மருந்துகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமரின் மலிவு விலை மருந்துகள் திட்டம், 2008ல் துவக்கப்பட்டது. இதன் அடிப்படையில், 2017ல் நாடு முழுவதும் 3,000 சமுதாய மருந்தகங்கள் திறக்கப்பட்டன. மார்ச் 2020ல், மொத்தம் 6,000 மக்கள் மருந்தக விற்பனை நிலையங்கள் இலக்கு எட்டப்பட்டது.

entrepreneur,north-east,public pharmacy ,தொழில்முனைவோர், மக்கள் மருந்தகங்கள், வடகிழக்கு

கடந்த நிதியாண்டில் பொது மருந்தக விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 8,610 ஆக இருந்தது. தற்போது 9,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த மருந்தகங்களில் 1,759 மருந்துகள் மற்றும் 280 அறுவை சிகிச்சை கருவிகள் மலிவான விலையில் விற்கப்படுகின்றன.

மேலும், முன்னணி மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் விலை, மற்ற மருந்து கடைகளை விட, இந்த மருந்தகங்களில், 90 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் பொதுமக்களின் மருத்துவச் செலவு ரூ.5,300 கோடியாக குறைந்துள்ளது. மேலும், வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், தீவுப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய மாவட்டங்களில் மக்கள் மருந்தகங்களைத் திறக்க, பெண் தொழில்முனைவோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் தொழில்துறையில் நுழைவதற்கு பிரதமரின் மலிவு விலைமருந்துகள் திட்டம் உதவுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :