Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் வரும் நவ.05 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் வரும் நவ.05 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Fri, 04 Nov 2022 6:13:46 PM

இந்த மாவட்டத்தில் வரும் நவ.05 ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி : வேலைவாய்ப்பு முகாம் .... தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அதிக அளவு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் மூலம் ஏராளமானோர் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அனைத்து தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க வரும் நாளை திருச்சி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க கூடிய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

employment camp,trichy , வேலைவாய்ப்பு முகாம்,திருச்சி

இதனை அடுத்து பற்றி இந்த முகாமை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருடன் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பிறகு பேசிய அமைச்சர் இந்த முகாம் வாயிலாக சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்கப்படவுள்ளது. மேலும் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மட்டும் 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags :