Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இந்த மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By: vaithegi Wed, 14 Dec 2022 7:46:24 PM

இந்த மாவட்டத்தில் வரும் 16ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் : தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ... இது தொடர்பாக ஆட்சியர் மேகநாதரெட்டி அவர்கள் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

எனவே அதன்படி, படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்கு வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்புஇந்த முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

employment camp,virudhunagar ,வேலைவாய்ப்பு முகாம்,விருதுநகர்

இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்துகொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, துத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தெரிவு செய்ய உள்ளார்கள்.

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்புபோர்கள் வரும் 16ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளததில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதனை அடுத்து இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :