Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்

By: Nagaraj Tue, 29 Dec 2020 8:26:42 PM

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தொடரும்

நடவடிக்கை தொடரும்... கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடரும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு திரும்ப விரும்பும் அனைவரும் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்த நடவடிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

minister,namal,government,many departments,have been affected ,அமைச்சர், நாமல், அரசாங்கம், பல துறைகள், பாதிக்கப்பட்டுள்ளன

அத்தோடு மிக நீண்ட காலமாக மூடப்பட்டிருக்கும் எல்லைகளை கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து நாட்டை மீண்டும் திறக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொற்றினால்ல் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொருளாதாரத்தையும் நாட்டின் எல்லைகளையும் மீண்டும் திறப்பதற்கும் அரசாங்கம் வழிகளைத் தேடி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

Tags :
|