Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது

By: vaithegi Sat, 30 July 2022 9:26:28 PM

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது


ராமநாதபுரம்: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தகவல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விவரங்கள் ஒரே தொகுதியில் இரு வேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை 1.8.22 தொடங்கி 31.12.22 வரை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அடங்கியுள்ள வாக்காளர்கள் தாமாக முன்வந்து https://www.nvsp.in என்ற இணையதளத்தில் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாக அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களப்பணியின் போது, படிவம் 6டீ -ஐ கொண்டுவரும் பொழுது மேற்கண்ட படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் உதவி மையம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

aadhaar number,voter list ,ஆதார் எண்ணை ,வாக்காளர் பட்டியல்

அதனால் அனைத்து வாக்காளர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags :