Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியானது இன்றுடன் முடிவடைகிறது

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியானது இன்றுடன் முடிவடைகிறது

By: vaithegi Thu, 08 Dec 2022 10:59:34 AM

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியானது இன்றுடன் முடிவடைகிறது

சென்னை: தமிழகம் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது. இப்பணிகளுக்காக கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடி அமைக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன.

இதனை அடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் கடந்த 1-ந்தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க பணியானது இன்றுடன் முடிவடைகிறது.

electoral roll,applications ,வாக்காளர் பட்டியல்,விண்ணப்பங்கள்

இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கம் செய்ய உடனடியாக மனு அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனைதொடர்ந்து விண்ணப்பங்கள் மீதான பரிசீலினை நடைபெறுகிறது.

இதையடுத்து விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படுகிறது.

Tags :