Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மேம்பாலம் அமைக்க திட்டம் விரைவில் பணிகள் துவக்கம்

சென்னையில் மேம்பாலம் அமைக்க திட்டம் விரைவில் பணிகள் துவக்கம்

By: vaithegi Tue, 07 Feb 2023 7:06:43 PM

சென்னையில் மேம்பாலம் அமைக்க திட்டம் விரைவில் பணிகள் துவக்கம்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டு வருகிறது.எனவே இதனை தடுக்கும் வகையில் போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு வருகிறது.

இதையடுத்து தற்போது வியாசர்பாடி கணேசபுரம் பாதையில் மேம்பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து கொருக்குப்பேட்டையில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய மற்றொரு ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

mempalam,chennai ,மேம்பாலம் ,சென்னை

இந்த பகுதியில் சரக்கு ரயில் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் சாலையை கடக்க காத்திருக்கும் சூழல் உருவாகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ள நிலையில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக மாநகராட்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு குறுக்குப்பேட்டை மற்றும் மணலி பகுதிகளுக்கு வாகனங்கள் எளிதாக செல்ல முடியும் என கூறியுள்ளனர்.

Tags :