Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் - பிரதமர் மோடி

நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் - பிரதமர் மோடி

By: Karunakaran Sat, 15 Aug 2020 3:10:47 PM

நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் - பிரதமர் மோடி

டெல்லி செங்கோட்டையில் 74வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நம்நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வ நன்றி என்று கூறினார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு ஆகிய காரணங்களால் போர்க்களமாக உள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நம் தேசத்தின் ஆத்மாவை ஒருபோதும் அழிக்க முடியாது. என்று பிரதமர் மோடி கூறினார்.

quality mantra,indian,self-sufficient,modi ,தரமான மந்திரம், இந்தியன், தன்னிறைவு, மோடி

பிரதமர் மோடி பேசுகையில், போராட்டத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக்கூடாது. பன்முகத்தன்மையே நமது பலம். இந்திய சுதந்திர போராட்டம் உலகம் முழுவதும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. பன்முகத்தன்மை கொண்ட நமது ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டனர். சுதந்திரத்திற்கான போரில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகம் முழுவதும் பிரதிபலித்தது. இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். சுய சார்பு இந்தியாவை நோக்கி நாடு வேகமாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் சொந்தக்காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும். நாடு தன்னிறைவு பெறுவதே ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரம் என்று உரையாற்றினார்.

Tags :
|