Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது

விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது

By: Karunakaran Tue, 13 Oct 2020 10:56:38 PM

விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது

பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும். இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது.

விரைவாக சூரியனை சுற்றி வரும் பூமி 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகத்தை அருகில் சந்திக்கிறது. அமீரக நேரப்படி நாளை (புதன்கிழமை) அதிகாலை சுமார் 3.20 மணிக்கு செவ்வாய் கிரகம் வானில் பிரகாசமாக தோன்றும். நாளை பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படுகிறது. அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்தே இந்த அரிய நிகழ்வு நடைபெறும்.

rare event,15 years,space,mars ,அரிதான நிகழ்வு, 15 ஆண்டுகள், விண்வெளி, செவ்வாய்

எந்த கிரகமும் சூரியனுக்கு நேர் எதிரில் வரும்போது பூமிக்கு மிக நெருக்கமான இடத்தை அடைவது இயல்புதான். அந்த வகையில், நாம் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது செவ்வாய் கிரகம் இன்னும் பெரிதாகவும், பிரகாசமாகவும், அருகிலும் தெரியும். இந்த ஆண்டு இறுதிவரை வானில் செவ்வாய் கிரகத்தை காணலாம். மிக பிரகாசமாக பார்க்க வேண்டுமானால் இம்மாத இறுதிவரை காணலாம். நாட்கள் கடந்து செல்ல செல்ல தொலைவும் அதிகரிப்பதால், பிரகாசமும், அளவும் பார்ப்பதற்கு குறையும். பொதுமக்கள் சூரிய மறைவுக்கு பிறகு வெறும் கண்ணால் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம்.

சூரியன் மேற்கில் மறைந்தவுடன் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைக்கு இடையே அரை மணி நேரம் பார்க்கலாம். பல வாரங்களுக்கு இதுபோல வானில் இந்த காட்சி தோன்றும். நள்ளிரவு நேரமாக இருந்தால் நமது தலைக்கு மேலே காணலாம். காலை நேரத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் செவ்வாய் கிரகத்தை பார்க்கலாம். வெறும் கண்ணால் பார்க்கும்போது புள்ளியாக ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமாக தெரியும்.

Tags :
|