Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான்கு சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பில் போலீசார் விடுத்துள்ள கோரிக்கை

நான்கு சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பில் போலீசார் விடுத்துள்ள கோரிக்கை

By: Nagaraj Mon, 10 Oct 2022 12:33:58 PM

நான்கு சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பில் போலீசார் விடுத்துள்ள கோரிக்கை

பிரிட்டன்: பிரித்தானியாவில் 4 சிறுவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை கண்டுபிடிக்க போலீஸார் விசாரணையை தீவிரமாக்கி உள்ளனர்.

மேற்கு யோர்க்ஷயரில் நேற்றிரவு காணாமல் போன நான்கு சிறுவர்களும் தேடப்பட்டு வரும் நிலையில் அவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.நால்வரில் ஒன்பது வயதுடைய ஒருவர், இன்று காலை காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைக் கண்டுபிடிக்க பொலிஸார் அவசரமாக முயன்று வருகின்றனர்.

மேற்கு யோர்க்ஷயர் பொலிசார் நால்வரும் எங்கிருந்து காணாமல் போனார்கள் என்பது குறித்த எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர்கள் கடைசியாக நேற்று இரவு 9.30 மணியளவில் அவதானிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

boys,mayam,all,police,investigation,four ,சிறுவர்கள், மாயம், அனைவரும், போலீசார், விசாரணை, நால்வர்

11 வயதான அனஸ்டாசியா ஹோர்வதோவா, 11 வயதான எடெல்லா கெசெலோவா, 9 வயதான அலெக்சாண்டர் கெசல், மற்றும் 13 வயதான டிபோர் லாக்கோ ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதாக கருதப்படுகிறது. காணாமல் போன நால்வரும் நடுத்தர உயரம் கொண்டுள்ள நிலையில் நால்வரும் கருப்பு நிற உடையணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த சிறுவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் 101 என்ற இலக்கத்திற்கு அழைப்பேற்படுத்தி அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags :
|
|
|
|