ரிப்பன் பில்டிங் கடிகாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
By: Monisha Fri, 01 July 2022 10:04:46 PM
சென்னை: சென்னை மாநகரின் வரலாற்று அடையாளங்களில் மிக முக்கியமானது வெண்மை நிறம் கொண்ட ரிப்பன் பில்டிங். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள இந்த கட்டிடம் தான் மாநகராட்சி அலுவலகமாக செயல்ப்பட்டு வருகிறது.
ரிப்பன் பில்டிங் என்றாலே அதன் வெண்மை நிறத்தை தாண்டி, உடனே நினைவுக்கு வருவது அதன் உச்சியில் உள்ள மிகப் பிரமாண்டமான கடிகாரம்.
1919 ஆம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்ட சென்னையில் உள்ள ரிப்பன் பில்டிங் உள்ள கடிகாரம் வயது 109. இந்த கடிகாரத்தின் தயாரிப்பு, மற்றும் பல உபகரணங்களின் தன்மை உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் இந்த கடிகாரத்தில் பல சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரிப்பன் பில்டிங் உள்ள கடிகாரத்தில் பழுது காரணமாக கடிகாரத்தை 25 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளனர்.
ஜூலை 26 முதல் மீண்டும் கடிகாரம் கம்பீரமாக ஓட ஆரம்பிக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.