Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பீகாரில் கடந்த மாதம் திறக்கப்பட்ட ஆற்றுப்பாலம் இடிந்தது

பீகாரில் கடந்த மாதம் திறக்கப்பட்ட ஆற்றுப்பாலம் இடிந்தது

By: Nagaraj Fri, 17 July 2020 10:49:25 AM

பீகாரில் கடந்த மாதம் திறக்கப்பட்ட ஆற்றுப்பாலம் இடிந்தது

புதிதாக திறக்கப்பட்ட ஆற்றுப்பாலம் இடிந்தது... பீகாரில் கடந்த மாதம் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்த ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த அவலம் அரங்கேறியுள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆற்றங்கரையோர கட்டுமானங்கள் பல இடிந்து விழுந்தன. சாலைகள் மற்றும் சிறிய பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

river bridge,collapsed,last month,opened,flooded ,ஆற்றுப்பாலம், இடிந்தது, கடந்த மாதம், திறக்கப்பட்டது, வெள்ளம்

இந்த நிலையில், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல்வர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்பட்ட சத்தர்காட் பாலம் நேற்று (ஜூலை 16) இடிந்து விழுந்தது. காங்டாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாட்னாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள இந்தப் பாலம் ரூ.260 கோடி செலவில் 1.4 கி.மீ நீளத்துக்குக் கட்டப்பட்டது. ஆபத்தை உணராமல் இடிந்த பாலத்தைப் பார்க்க அப்பகுதிக்கு வந்த மக்கள், பாலத்தின் மீது நின்று ஆற்று வெள்ளத்தை வேடிக்கை பார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
|