Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழு வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனை

நாடு முழு வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனை

By: vaithegi Tue, 14 Nov 2023 11:08:58 AM

நாடு முழு வதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனை

சென்னை: உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி ...சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிய மற்றும் பெரிய அளவில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி கொண்டு வருகின்றன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் இங்கு 95 சதவீதத்துக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, சிவகாசி பட்டாசு ஆலைகளில் பசுமைப் பட்டாசு மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது.

சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிரந்தர உரிமம் பெற்ற 2,500-க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனைக் கடைகள் உள்ளன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, சரவெடி உற்பத்திக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீத பட்டாசுகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

firecrackers,sales,manufacturers,traders ,பட்டாசுகள் ,விற்பனை , உற்பத்தியாளர்கள், வியாபாரிகள்

இதையடுத்து மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால், கடந்தாண்டு பட்டாசு விலை 40சதவீதம் அதிகரித்தது. எனினும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றது. இந்த ஆண்டு முன்னதாகவே, ஆஃப் சீசன் பட்டாசு உற்பத்தி தொடங்கியது. ஆஃப் சீசன் விற்பனை பாதிப்பு மற்றும் வடமாநிலஆர்டர் குறைவு போன்ற பிரச்சினை கள் இருந்தன.

இருப்பினும் தீபாவளி பட்டாசு விற்பனையில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை. இந்தாண்டு தீபாவளி சீசனுக் காக ஆடிப்பெருக்கு அன்று 1,500 பட்டாசு விற்பனை கடைகள் சிறப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டன. இறுதிக்கட்டத்தில் நாடு முழுவதும்பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றதால், கடந்த ஆண்டைப் போல் இந்தாண்டும் பட்டாசு விற்பனை ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு நடைபெற்றது.

Tags :
|