Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடக்கவிருந்த நேருக்குநேர் விவாதம் ரத்து

டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடக்கவிருந்த நேருக்குநேர் விவாதம் ரத்து

By: Karunakaran Sat, 10 Oct 2020 4:09:23 PM

டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே நடக்கவிருந்த நேருக்குநேர் விவாதம் ரத்து

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இரண்டாவது நேருக்குநேர் விவாதம் அக்டோபர் 15 ஆம் தேதி மியாமியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், இரு கட்சிகளும், இதுதொடர்பாக மாற்றுத் தேதி தொடர்பான பரிந்துரையை தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நேரடி விவாதத்தை காணொளி வாயிலாக நடத்த விவாதங்களுக்கான ஆணையம் முடிவு செய்தது. ஆனால் காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுத்துவிட்டதை அடுத்து விவாதம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

america,face-to-face discussion,trump,joe biden ,அமெரிக்கா, நேருக்கு நேர் கலந்துரையாடல், டிரம்ப், ஜோ பிடன்

இருப்பினும் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையிலான கடைசி நேருக்கு நேர் விவாதம் வரும் 22ம் தேதி டென்னிசி மாநிலம் நாஷ்வில்லேயில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அதிபர் விவாதங்களுக்கான ஆணையம் செய்து வருகிறது. கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் அதிபர் தேர்தலுக்கு முன்பு பிரதான கட்சிகளின் அதிபர் வேட்பாளர்கள் பங்குபெறும் விவாதம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அதிபர் டிரம்புக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஜோ பிடன், டிரம்ப் முழுமையாக குணமடைந்தால் தான் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என்று கூறினார். அதன்படியே காணொளி மூலம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுத்துவிட்டதாழ், இந்த விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|