Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மகாராஷ்டிராவில் கொரோனா குறைந்த பகுதிகளில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும்

மகாராஷ்டிராவில் கொரோனா குறைந்த பகுதிகளில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும்

By: Karunakaran Tue, 16 June 2020 12:06:56 PM

மகாராஷ்டிராவில் கொரோனா குறைந்த பகுதிகளில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது. நாட்டிலே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜூன் 15-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டு தொடங்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. மேலும், சிவப்பு மண்டலம் அல்லாத அதாவது கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் 9, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாட வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

maharastra,coronavirus,school open,new academic year ,புதிய கல்வியாண்டு ,கொரோனா வைரஸ்,மகாராஷ்டிரா,பள்ளி திறப்பு

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் பள்ளிகளை திறக்க முடியவில்லை என்றாலும், மாணவர்களை பாடங்கள் சென்றடைய டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறுகையில், முதல் மற்றும் 2-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் கற்பித்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது எனவும், அகில இந்திய வானொலி அலைவரிசையை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சென்றடைய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பள்ளிகளை ஆகஸ்டு மாதமே திறக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :