Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை மற்றும் ஞாயிறு நடைபெறும்

இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை மற்றும் ஞாயிறு நடைபெறும்

By: Monisha Fri, 11 Dec 2020 4:01:24 PM

இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை மற்றும் ஞாயிறு நடைபெறும்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 21-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனை மையமாக வைத்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் சிறப்பு முகாம் நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணியினை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியது.

தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்காக மட்டும் 13 லட்சத்து 46 ஆயிரத்து 907 விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டன. அதில் 21-ம் தேதி 5 லட்சத்து 43 ஆயிரத்து 523 மனுக்களும், 22-ம் தேதி 8 லட்சத்து 3 ஆயிரத்து 380 மனுக்களும் பெறப்பட்டன.

voter list,name,addition,deletion,camp ,வாக்காளர்பட்டியல்,பெயர்,சேர்த்தல்,நீக்குதல்,முகாம்

இந்த நிலையில் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொது மக்கள் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். 21 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் இரண்டு இடங்களில் பெயர் இருந்தால் அவற்றை நீக்கவும், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் பெயர்களை நீக்கும் பணிகளும் இந்த முகாம்கள் வழியாக செய்யப்படுகிறது. அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இந்த பணியை மேற்கொள்ள தயாராகி வருகிறார்கள். இது கடைசி வாய்ப்பாக இருப்பதால் பெயர் சேர்த்தல், நீக்குதல் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுப்பதில் தீவிரம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முகாமைவிட நாளை நடைபெறுகின்ற முகாமில் அதிக மனுக்கள் பெறப்பட வாய்ப்பு உள்ளது.

Tags :
|