Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு குளறுபடியால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி; பிரிண்டிங் தவறு என விளக்கம்

நீட் தேர்வு குளறுபடியால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி; பிரிண்டிங் தவறு என விளக்கம்

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:09:59 AM

நீட் தேர்வு குளறுபடியால் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி; பிரிண்டிங் தவறு என விளக்கம்

தேர்வு எழுதியதே 3,536 பேர்தான். ஆனால் தேர்ச்சி 88,889 பேர் என்று வந்துள்ளது. இது தேசிய தேர்வு முகமை வெளியிட்ட நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவில் ஏற்பட்ட குளறுபடிதான்.

திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 50 ஆயிரத்து 392 பேரில் 1738 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15% என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37, 301என அறிவிப்பு வெளியாகியுள்ளது. உ.பி.யில் 1.56 லட்சம் பேரில் 7 ஆயிரத்து 323 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79% என அறிவிக்கப்பட்டுள்ளது.

printing,mess,need selection,students,description ,பிரிண்டிங், குளறுபடி, நீட் தேர்வு, மாணவர்கள், விளக்கம்

மாணவர்களின் எண்ணிக்கை மாநில தேர்ச்சி விகிதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தனிப்பட்ட மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, இது பிரிண்டிங்கில் ஏற்பட்ட குளறுபடி என்றும் புதிய அறிவிக்கை மற்றும் முறையான விளக்கம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

Tags :
|